×

குஜராத்தில் ரூ.217 கோடி ஹெராயின் சிக்கியது

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள கலவர தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஹெராயின் கடத்தி வருவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள பாத்ஹரி தாலுகாவில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.217 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்தி வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை அவர்கள் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 31 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மே 24ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

The post குஜராத்தில் ரூ.217 கோடி ஹெராயின் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Gujarat ,AHMEDABAD ,Rajkot ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...